Tuesday, February 12, 2008

இன்றோடு அரையாண்டுக‌ள்...

தரணியிலே தவழ்‍‍ந்தாய்
தலைமகனாய் திகழ்ந்தாய்
திரவியம் தேடினாய் -‍ அதில்
வெற்றியும் கிட்டினாய் – அதற்கு
பரிசாக – எங்கள்
பேதையை பெற்றாய்


உங்களை வாழ்த்தியவர்கள்
ஒன்றல்ல இரண்டல்ல‌ - உன்னால்
வாய்விட்டு கதறியவர்களும்
ஒன்றல்ல இரண்டல்ல‌
நொடி பொழுதில் சென்றுவிட்டாய் – நம்மவர்
உள்ளத்தை - நொடிய வைத்தாய்
நழிய வைத்தாய்
வெண்மனம் கொண்ட
எங்கள் வெள்ளையா...


இன்றோடு அரையாண்டுக‌ள்
நீயின்றி க‌ழித்தோம் ‍உவ‌கையின்றி,
ஆண்டுகள் அரையாயிற்று – எங்கள்
அகத்தினுள் திடம் குறையாயிற்று


-வடிவுள்ளான்

No comments: